×

திருவள்ளூர் அருகே ரூ.2 லட்சம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல்: ஊராட்சி தலைவர் கைது

திருவள்ளூர்: சென்னை அடுத்த பீர்க்கன்காரணை சீனிவாசன் நகரை சேர்ந்தவர் உதயசங்கர் (30). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் கட்டுமான தொழில் செய்து வருகிறார். தற்போது, கடம்பத்தூர் அடுத்த தொடுகாடு பகுதியில் உள்ள தர்மிசந்த் என்பவரது நிலத்தில் மதில் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இங்கு இந்த பணியை செய்வதற்கு தொடுகாடு ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ₹2 லட்சம் மாமூல் கேட்டு உதயசங்கரை மிரட்டி வந்துள்ளார். மேலும் பணி செய்யவிடாமல் தடுத்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் வழக்கம் போல பணிக்கு வந்த உதயசங்கரை, வெங்கடேசன் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். வேலை செய்யும் ஆட்களையும் மிரட்டியுள்ளார். இதை தட்டிக்கேட்ட உதயசங்கருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்றார் வெங்கடேசன். அவரிடம் இருந்து தப்பிய உதயசங்கர், மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிந்து வெங்கடேசனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை நீதிபதி விசாரித்து, வெங்கடேசனை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Tags : Panchayat leader ,Tiruvallur Panchayat ,Tiruvallur , Tiruvallur, Rs 2 lakh, ordinary asking, death threat, panchayat leader, arrested
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...