×

சொப்னாவுக்கு மேலும் 4 நாள் காவல்

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா, சந்தீப் நாயர், சரித்குமார் ஆகியோரை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா, சந்தீப் நாயர், சரித்குமார் ஆகியோரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து வந்தது. காவல் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது கூடுதல் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் மேலும் 5 நாள் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி  அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் 4 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

Tags : Sopna, 4 day, guard
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...