×

திருப்போரூர் பேரூராட்சியில் கொரோனாவுக்கு ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் பலி

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூரில் 6, சிறுங்குன்றத்தில் 5, நாவலூர், தண்டலம், தையூர் ஆகிய ஊராட்சிகளில் தலா 3, பெரிய இரும்பேடு, கரும்பாக்கம், புங்கேரி, நெல்லிக்குப்பம் ஆகிய கிராமங்களில் தலா 2, எடர்குன்றம், கேளம்பாக்கம், ஆலத்தூர், கண்டிகை, கொளத்தூர், படூர், அனுமந்தபுரம், கழிப்பட்டூர் ஆகிய கிராமங்களில் தலா ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

அதேபோன்று திருப்போரூர் பேரூராட்சியில் சான்றோர் வீதி, செங்கல்பட்டு சாலை, மடம் தெரு, திருவஞ்சாவடி தெரு, பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதியானது. திருப்போரூர் புது தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற 72 வயது ஆசிரியர், கொரோனா தொற்று காரணமாக கடந்த 1 வாரமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த ஊனைமாஞ்சேரி ஊராட்சியில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அப்பகுதியில், ஒத்திவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 483 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதும் இதுவரை 18, 332 பேருக்கு உறுதியாகி, 15117 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 5 பேர் இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை 312 பேர் இறந்துள்ளனர்.

Tags : school teacher ,municipality ,Corona ,Thiruporur , Thiruporur Municipality, Corona, retired, school teacher, killed
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு