திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 7 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்தி 35 ஆயிரத்தி 525 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 87,773 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1 லட்சத்து 45 ஆயிரத்து 636 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2116 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.