×

ஏறுமுகத்தில் அணிகலன்கள்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.41,616-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.41,616-க்கு விற்பனை செய்யப்பட்டு நாள்தோறும் ஏறுமுகத்தை கண்டு வருகிறது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

இதனையடுத்து, பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.5202-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ 41,616 க்கு விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.60-க்கு விற்கப்படுகிறது.


Tags : Chennai , Chennai, Gold Price, Sale
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...