திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில், மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் கேவிஜி.உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் டி.தேசிங்கு, செயலாளர் கென்னடி பூபாலராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம், கையுறையுடன் தமிழகத்திலேயே முதல் முறையாக அனைவரும் உடற்கவசம் அணிந்து, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பாதுகாப்புடன் கலந்துகொண்டனர்.