திருவனந்தபுரம்: சரித், சந்தீப் வீட்டில் கைப்பற்றபட்டது போன்றே அதிகாரி சிவசங்கர் வீட்டில் மற்றொரு பை சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவசங்கர் வீடு அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புக் வந்து சென்றோர் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதிகாரி சிவசங்கர் தங்கியிருந்த வளாகத்தில் உள்ள சிசிடிவி பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் ரூ.5 கோடியில் ஆடம்பர பங்களா கட்ட ஸ்வப்னா முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.