சென்னை: நாவலர் நெடுஞ்செழியன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நாவலர் உருவச்சிலை அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.