×

போக்சோவில் வாலிபர் கைது

தாம்பரம்: கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு நேற்று திடீரென உடல்வலி என அவரது பெற்றோர்களிடம் தெரிவித்தாள். இதனையடுத்து சிறுமியிடம் அவரது பெற்றோர்கள் விசாரித்தபோது நேற்று முன்தினம் வீட்டின் அருகே தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (30) என்பவர் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தாள். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோவில் உதயகுமாரை கைது செய்தனர்.

Tags : Bokso, Plaintiff, Arrested
× RELATED திருவேங்கடம் அருகே பயங்கரம் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்