×

குட்டி சென்னையாக மாறிவரும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள்...! ஒரே நாளில் 4329 பேருக்கு கொரோனா; பிற மாவட்டங்களை சேர்ந்த 2247 பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த  எண்ணிக்கை 1,02,721-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 58,378 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,357 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு 42,955 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1385 - ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 2,182 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 64,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,111 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 32 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 996ஆக உள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் இதுவரை 12,13,891 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் 12 வயதிற்குள் 5053 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 85305 பேரும், 60 வயதிற்கு மேல் 12363 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



Tags : districts ,Tamil Nadu ,Corona ,Chennai , Corona, Tamil Nadu, Chennai
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில்...