மதுரை: வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்காவிட்டால் தனக்கு வாட்ஸ்ஆப்பில் புகார் அளிக்கலாம் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார். சிறுகுறுதொழில் செய்வோர் குடும்ப அட்டையுடன் வந்தால் ரூ.50,000 கடன் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.56 ஆயிரம் கோடி டெபாசிட் கூட்டுறவு வங்கிகளில் உள்ளது.