சென்னை: தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்பப்பெற சென்னையில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இன்றுமுதல் பணம் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.