மதுரை : நிலவேம்பு கசாயம் வழங்கியதில் கடையநல்லூர் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி முறைகேடு செய்ததாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி மீதான புகார் குறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.