×

இனிமே ஊரு பக்கமே தலைகாட்டமாட்டேன் அவங்கள பொறுத்தவர நான் இறந்துட்டேன்யா...: சர்ச்சை சாமியார் நித்யானந்தா பரபரப்பு வீடியோ

புதுடெல்லி: தான் இறந்துவிட்டதாகவும், தனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்று சாமியார் நித்யானந்தா வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண் சர்ச்சைகளில் சிக்கியவர் சாமியார் நித்யானந்தா. இளம்பெண்களை கடத்தி வைத்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டும் எழுந்தது. இதுதொடர்பாக அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது வெளிநாட்டில் இருந்து கொண்டு தினந்தோறும் வீடியோக்கள் மூலம் தன்னை பின்பற்றுபவர்களிடம் பேசி வருகிறார். இந்தநிலையில் அவர்  வெளியிட்ட புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது: கடந்த 20 ஆண்டு கால போராட்டத்தை தொடர்ந்து, கைலாசத்தை கட்டி முடித்துள்ளேன். கிறிஸ்தவர்களின் வாடிகனைப் போல, இந்து மதத்துக்கு என்று ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது.

கைலாசாவுடன் சில நாடுகள் தூதரக ரீதியிலான உறவை தொடங்கியுள்ளன. நான் இறந்தால், என்னுடைய எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது பற்றி உயில் எழுதி வைத்துவிட்டேன். தமிழகத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனி தமிழகத்துக்கு வரமாட்டேன். தமிழக ஊடகங்களை பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன். நான் இறந்துவிட்டால் எனது உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் இதுவே எனது கடைசி ஆசை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Nirupananda ,Samyar Nithyananda , Controversy, Samyar Nithyananda, Sensational Video
× RELATED கர்நாடகாவில் பலாத்கார வழக்கு பதிவு...