×

தாம்பரம்-நாகர்கோவில் ரயிலில் படுக்கை கழன்று விழுந்து பயணி காயம்

மதுரை: தாம்பரம்-நாகர்கோவில் ரயிலில் படுக்கை கழன்று விழுந்ததில் பயணிகள் 2 பேர் காயமடைந்தனர். சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்றிரவு 7.20 மணிக்கு நாகர்கோவிலுக்கு விரைவு ரயில் கிளம்பி வந்தது. எஸ்10 பெட்டியில் படுக்கை எண் 35ல் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த தர்மராஜ் (70) கீழ் பர்த்தில் தூங்கி கொண்டிருந்தார். நடு பர்த்தில் ஒருவர் படுத்திருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் நடுவில் உள்ள பர்த் திடீரென சங்கிலி கழன்று, லோயர் பர்த்தில் தூங்கிய முதியவர் தர்மராஜ் என்பவர் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

சத்தம் கேட்டு பக்கத்து படுக்கையில் இருந்தவர்கள் விரைந்து வந்து தர்மராஜ் உட்பட இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.  ரயில் மதுரைக்கு வந்ததும் ரயில்வே ஊழியர்கள் படுக்கையை சரிசெய்ய முயன்றனர். ஆனால், முடியவில்லை. அரை மணி போராட்டத்திற்கு பின் படுக்கை சரிசெய்யப்பட்டது. இதனால் ரயில் அரை மணிநேரம் தாமதமாக  நாகர்கோவில் புறப்பட்டு சென்றது.

Tags : Nagercoil , Tren, viajero herido en Tambaram-Nagercoil
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு