திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திருத்தங்களை கண்டித்து கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் திருவனந்தபுரத்தில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வருகிறார். திருவனந்தபுரத்தில் தியாகிகள் நினைவுத்தூண் அருகே நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னித்தலாவும் பங்கேற்றுள்ளார். இடதுசாரி ஜனநாயக முன்னனி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கட்சித் தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.