சென்னை: சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும், பொறியியல் கல்லூரிகளை வழக்கம் போல் நிர்வகிக்க அண்ணா பல்கலைக்கழகம் தயாராகவுள்ளது. இடஒதுக்கீடுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் சிறப்பு அந்தஸ்து அமல்படுத்தப்படவுள்ளது என அண்ணா பல்கலை. பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள மேம்படுத்துறையின் உத்தரவாதம் கிடைத்தவுடன், அண்ணா பல்கலை. உயர்சிறப்பு பல்கலை.-ஆக மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.