ஆலந்தூர்: மடிப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் சுந்தரேசன் (63). இவர், அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை அடிக்கடி விளையாடுவது போல் அழைத்துச் சென்று, சாக்லெட் கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனே இதுபற்றி மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார், சுந்தரேசனை பிடித்து விசாரித்தபோது, அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் மாலை சுந்தரேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.