சென்னை: ஐகோர்ட்டுக்கு எதிரே என்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதையில் நிறுத்தி உள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி அறிக்கை தர ஆணையிட்டுள்ளனர். நடைபாதையில் இடையூறாக உள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி மாநகராட்சி அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்ட நடைபாதையில் கடைகள், இருசக்கர வாகனங்களை நிறுத்தி இடையூறு என ஆடிட்டர் வந்தனா வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை மாநகராட்சி ரூ.50 கோடி செலவில் நடைபாதை அமைத்துள்ள நிலையில் அவற்றை சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் மனுவில் புகார் எழுந்துள்ளது.