திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், போக்குவரத்து துறை செயலாளர் அறிக்கையின்படி அபாரத தொகையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. சீட் பெல்ட், ஹெல்மெட் போடாதவர்களுக்கு அபராத தொகை 1000 ரூபாயில் இருந்து 500 ஆக குறைக்கப்பட்டது. அதேபோல், மற்ற விதிமுறை மீறல்களுக்கான அபராதமும் கணிசமாக குறைக்கப்படுகிறது.