டெல்லி: டெல்லி வன உயிரியல் பூங்காவில் உள்ள தடுப்பு வேலியை மீறி உள்ளே சென்று சிங்கத்தின் முன் அமர்ந்து கை கொடுக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். டெல்லி வன உயிரியல் பூங்காவில் இன்று நண்பகல் 12 மணி அளவில் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் காத்திருந்தனர். அப்போது அனைவரையும் மீறி கருப்பு பனியன் அணிந்த இளைஞர் பூங்காவுக்குள் ஓடினார்.இளைஞர் ஒருவர் உள்ளே சென்ற விஷயத்தை அறிந்ததும் பூங்கா காவலர்கள் அவரை விரட்டிச் சென்றனர். அந்த கறுப்புச் சட்டை அணிந்த இளைஞர் சிங்கம் அடைத்து வைக்கப்பட்டுள்ள முள் கம்பி வேலி சூழப்பட்ட இடத்தைத் தாண்டி குதித்தார். அங்கிருந்து நடந்து சென்ற அவர் ஒரு மரத்தின் அருகே நின்றிருந்த சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்துகொண்டார்.