திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் சார்பில் தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம் செய்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் சேகர் ரெட்டி நீக்கப்பட்டிருந்தார்.