×

50 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகளை இணைத்து மணப்பாறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

மணப்பாறை: மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நிர்வாககுழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாகக்குழு உறுப்பினர் தங்கமணி தலைமை வகித்தார். நகர செயலாளர் முகம்மதுஉசேன், புறநகர் மாவட்ட குழு முடிவுகள் குறித்து பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி வாழ்த்திப் பேசினார். கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக மணப்பாறையை மையமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்கள் உருவானாது. கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர், தோகைமலை ஒன்றியங்களும் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை தாலுகா, மருங்காபுரி தாலுகா, மணப்பாறை நகராட்சி, பொன்னம்பட்டி பேரூராட்சி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை எளிதில் நிறைவேற்றும் வகையிலும், விவசாயம் சார்ந்த இப்பகுதிகள் தற்போது வானம் பார்த்த பூமியாக உள்ளது. எனவே மாவட்டங்களின் கடைக்கோடி பகுதியில் உள்ள 50 கி.மீ. சுற்றளவில் இருக்கும் ஒன்றியங்களை இணைக்க வேண்டும். எவ்வித முன்னேற்றமும் பெறாத இப்பகுதிகளை ஒன்றிணைத்து மணப்பாறையை மையமாக கொண்டு 50 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் இப்பகுதியில் பூக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதால் குளிர்சாதன நிலையங்கள் அமைக்கவும், வாசனை திரவிய தொழிற்சாலை கொண்டு வரவேண்டும். சிமிண்ட் உற்பத்தி செய்யும் சிட்ட கற்கள் நிறைந்து இப்பகுதியில் சிமிண்ட் தொழிற்சாலை அமைக்கவும், தொழில்நுட்ப கல்லூரி, அறிவியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி துவங்கிடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags : 50 km Marriage ,declared, separate district incorporating , Indian Commun. Emphasis
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...