கோவை: உளவுத்துறையின் எச்சரிக்கையை ஒட்டி கோயம்புத்தூரில் மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது. பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.