சென்னை: நெல்லை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 14 வரை ஒரு நாளைக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பு மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 62,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதல்வர் கூறியுள்ளார்.