சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 1,085 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பாக சதுப்பு நில வழக்கில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வனத்துறை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.