சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, பாகலூர், உத்தனப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில், போரூர், ராமபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.