பெங்களூரு: என்னுடையை குணநலனை விமர்சிப்பவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார். சட்டசபையில் பேசிய அவர், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. யாரையும் சாராமல் நடுநிலையோடு முடிவெடுக்க கூடிய வலிமை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.