×

கட் அவுட் அமைத்த போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

சுரண்டை: நெல்லை மாவட்டம், சுரண்டை வரகுணராமபுரத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் செய்து வந்தனர். இதற்காக நேற்று காலை சுமார் 30 அடி உயரமுள்ள டிஜிட்டல் கட்அவுட்டை வைக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக காற்றில் அருகிலுள்ள மின் வயரில் கட்அவுட் உரசியது. இதில் கட்அவுட்டை எடுத்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த  சரவணன்(29), மணி (25) மற்றும் அரவிந்த்(28) ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரவணன், மணி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். அரவிந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.



Tags : Cut out, electricity, 2 people killed
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...