×

ரிப்பன் மாளிகையில் ஆண் சடலம் மீட்பு

சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை அருகில் தொழிற்சங்க அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று காலை அம்மா மாளிகை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது தொழிற்சங்க அலுவலக மேற்கூரையில் ஒருவர் படுத்திருந்ததை பார்த்த துப்புரவு பணியாளர் மதுபோதையில் இருப்பதாக நினைத்து அவரை கீழே இறங்கும்படி சத்தம் போட்டனர். ஆனால் அவரிடமிருந்து பதில் மற்றும் உடலில் எந்த அசையும் இல்லதாதல் சந்தேகத்தின்பேரில் மேலே சென்று பார்த்தனார். அப்போது அவர் கழுத்தில் ஒயரால் இழுக்கப்பட் நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பெரியமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாநகராட்சி ரிப்பன் மாளிகை பொருத்தப்பட்டு சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடக்கிறது. அவர்  கொலை செய்யப்பட்டு கூரையின் மீது வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


Tags : Male,Corpse,Recovery ,Ribbon House
× RELATED தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி: முதல்வர்...