×

பேரிக்காய் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல்: கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே செண்பகனூர், அப்சர்வேட்டரி, வட்டக்கானல், வில்பட்டி, பெரும்பள்ளம், அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, அட்டக்கடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் மலைப்பகுதிகளில் சுமார் 3000 ஹெக்டேர் பரப்பளவில் நாட்டுப் பேரி, முள்பேரி, தண்ணீர் பேரி, ஊட்டி பேரி, வால்பேரி ஆகிய பேரிக்காய் மரங்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலம் பேரிக்காய் சீசனாகும். பிற பகுதிகளில் விளையும் பேரிக்காய்களை விட கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் பேரிக்காய்களுக்கு தனிச்சுவை உண்டு.
இதனால் இங்கு விளையும் பேரிக்காய்கள், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விளைச்சல் மற்றும் ரகத்திற்கு தகுந்தாற்போல் ஒரு கிலோ பேரிக்காய் ரூ.30 முதல் 40 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது பேரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Pear yields, amok, farmers
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...