×

குற்றாலத்தில் சாரல் ‘மிஸ்சிங்’ அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தென்காசி: குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் இல்லாத காரணத்தால் அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சாரல் சரிவர பெய்யவில்லை. நேற்று மதியம் வரை வெயிலும் மதியத்திற்கு பின்னர் சற்று இதமான சூழல் நிலவியது. சாரல் இல்லை. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சிறிதளவு தண்ணீர் விழுகிறது பெண்கள் பகுதியில் பாறை ஒட்டினாற் போன்று சிறிதளவு தண்ணீர் கசிகிறது. ஐந்தருவியில் 2 பிரிவுகளில் சுமாராக தண்ணீர் விழுகிறது.

பழைய குற்றாலத்திலும் பாறையை ஒட்டினாற் போன்று தண்ணீர் கசிகிறது. புலியருவியில் தண்ணீர் இல்லை. இங்கு தண்ணீர் வரத்து அடியோடு நின்று விட்டது. தொடர்ந்து சாரல் இல்லாத காரணத்தாலும் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுவதாலும் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. மெயின் அருவியில் விழும் குறைவான தண்ணீரில்  ஒரு சில சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தபோதும் அவர்களும் வரிசையில் நின்றே குளிக்கின்றனர். தொடர்ந்து சாரல் இல்லாமல் சீசன் டல்லடித்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags : Saral ,Courtallam , Shower in Courtallam, 'Missing,' waterfall, water,
× RELATED சோழவந்தான் அருகே பெண்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கல்