மேட்டூர்: கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் விநாடிக்கு 456 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 398 கனஅடியாக சரிந்தது. நேற்று முன்தினம் 45.22 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 45.11 அடியாக சரிந்தது.