×

ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்தவர் மீது தாக்குதல்

புதுடெல்லி: அரியானாவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கூற மறுத்த சிறுபான்மை நபர் மீது கும்பல் நடத்திய தாக்குதலால் பதற்றம் நிலவுகிறது. டெல்லி புறநகரில் உள்ள, குருகிராமில் நேற்று முன்தினம் 25 வயது வாலிபர் ஒருவர் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்தது. ‘ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜெய்’  என கூறும்படி மிரட்டியது. அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, அவரை சரமாரியாக தாக்கினர். இதனால், அவர் காயமடைந்தார். இது பற்றி அந்த வாலிபர் கூறுகையில், ‘‘ஜெய் ஸ்ரீராம் என நான் கூற மறுத்ததால், ஒருவர் என் கன்னத்தில் அறைந்தார்.  மற்றொருவர் கம்பால் அடித்தார். சிலர் ஆபாசமாக திட்டினர்,’’ என்றார். காயமடைந்த அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசில் அந்த வாலிபர் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் குருகிராமில் பதற்றம் நிலவுகிறது.

Tags : Jai Shiram , Jai Sriram, refuted, attacked
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...