×

காரின் வெப்பத்தை தணிக்க மாட்டு சாணத்தை மொழுகிவைத்த பெண்

குஜராத்: அஹமதாபாத்தில் வசிக்கும் செஜல் ஷாஹ என்ற ஒரு பெண் வெப்பத்தை தாங்க முடியாமல் தனது கார் முழுவதும் மாட்டுச் சாணத்தை அப்பி மொழுகி வைத்து கார் பயணம் மேற்கொண்டு வருகிறார். அடிக்கிற வெயிலில் காருக்குள் ஏசி போட்டு அனைவரும் பயணம் சென்றுக் கொண்டு இருக்கும் வேளையில், அந்த காரை வெப்பம் தாக்கக் கூடாது என்று சாணத்தை மொழுவியுள்ளார். இந்த செயல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இது பற்றி செஜல் ஷாஹவிடம் கேட்கும் போது; நான் என் வீட்டில் சாணத்தை தரையில் மொழுகி வைப்பது வழக்கம். இவ்வாறு செய்தல் வீட்டில் குளிர்ச்சியாக இருக்கும். ஆகையால் காரின் மேல் சாணத்தை மெழுகினால் வெப்பம் தணிக்கும் என்று இவ்வாறு செய்தேன் என்று தெரிவித்தார். சமீபத்தில் கொல்கத்தாவில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் மேலே சிறிய தோட்டம் ஒன்றை அமைத்தார். இந்நிலையில் தற்போது கார் முழுவதும் சாணத்தை மொழுவி செஜல் ஷாஹ பயணம் மேற்கொண்டு வருகிறார்.


Tags : cow dung , Sejal Shah, Ahmedabad,her car, cow dung
× RELATED பெரியார் சிலை மீது மாட்டு சாணம்...