×

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 24-ம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வரும் 24-ம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தெற்கு உள் கர்நாடகத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை நிலப்பரப்பில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. மே 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

இதேபோல் திருச்சி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வடக்கு, மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும். தெற்கு, தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதேபோல் கேரளா, லட்சத்தீவு மற்றும் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா கடலோர பகுதிகளில் மழைபெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


Tags : rainfall ,state ,Tamil Nadu ,Weather Center , Rain, Chennai Weather Study Center,
× RELATED மாநில விலங்கான வரையாடுகள் கணக்கெடுப்பு ஏப்.29ல் தொடக்கம்