×

சொத்துவரி உயர்த்தியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சொத்துவரி உயர்த்தியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை நகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து திமுக எம்எல்ஏ ஏ.வ.வேலு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனித்தனியாக மதிப்பீடு செய்யாமல் சொத்து வரியை உயர்த்தியது சட்டத்தை மீறிய செயல் என்று மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், தமிழக அரசு ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Tamil Nadu Government , Property, documents, territorial government, high court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...