திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல மலையாள நடிகை கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவு திருச்சூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு காரில் சென்றபோது ஒரு கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் நடிகையின் முன்னாள் டிரைவர் பல்சர் சுனில், நடிகர் திலீப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். திலீப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கையை ஏற்று, பெண் நீதிபதி தலைமையிலான தனி நீதிமன்ற விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதன்படி, பெண் நீதிபதி நேற்று விசாரணை தொடங்கினார். பின்னர் விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி