×

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 தேர்வு முடிவு ஏப்ரல் 19-ம் தேதி வெளியீடு: பள்ளிக் கல்வித் துறை

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தின் படி இந்த தேர்வு நடத்தப்பட்டது. பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். 2941 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடந்தது. கணிதம், விலங்கியல், வணிகவியல், வேதியியல் ஆகிய பாடங்களை தவிர மற்ற பாடங்கள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த பணி ஏப்ரல் 11-ம் தேதி முடி வடையும் என கூறப்படுகிறது. அதன்பிறகு ஏப்ரல் 19-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன என பள்ளிக்கல்வி துறை அறித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Puducherry ,Tamilnadu ,School Education Department , Plus 2 exam results,Tamilnadu,Puducherry ,April 19, School Education Department
× RELATED அரசு பள்ளிகளில் இதுவரை 3.25 லட்சம் மாணவர் சேர்க்கை