×

புல்வாமா தாக்குதல் சர்ச்சை : மும்பை திரைப்பட நகரில் நுழைய சித்துவுக்கு தடை

மும்பை: புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து கூறிய பஞ்சாப் அமைச்ச்ர நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, மும்பையில் உள்ள திரைப்பட நகரில் (பிலிம் சிட்டி) நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல காமெடி நடிகர் கபில் சர்மா நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சித்து, புல்வாமா தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர், “சிலர் செய்த தவறுக்காக ஒட்டு மொத்த பாகிஸ்தானையும், அதன் மக்களையும் குறை சொல்லக் கூடாது” என்றார். அவருடைய இந்த கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது. சித்துவின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அவர் கபில் சர்மா நடத்தும் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இந்நிலையில், மும்பை கோரேகாவில் உள்ள பிலிம் சிட்டிக்குள் நுழையவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு இந்தியா திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு இது தொடர்பாக பிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குனருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பிலிம் சிட்டிக்குள் நுழைய சித்துவுக்கு தடை விதிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. சித்து தெரிவித்த கருத்துக்கு அனுபம் கேர் மற்றும் மனோஜ் ஜோஷி உள்ளிட்ட பல பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pulwama ,Murti ,movie city ,Mumbai , Pulwama attack, Mumbai film city, banned from Siddhu
× RELATED புல்வாமாவில் என்கவுன்டர் தீவிரவாதி சுட்டு கொலை