×

ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு: தீவிரவாதிகளுக்கு பாக். ஆதரவு

பாத்ரக்: ‘‘விரக்தி அடைந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததன் வெளிப்பாடே புல்வாமா தாக்குதல்’’ என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று ஒடிசா சென்றார். ஆங்கிலேயர் ஆட்சியில், பஞ்சாப்பின் அமிர்தசரசில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை போல, ஒடிசாவின் இரம் பகுதியில் 1942ம் ஆண்டு படுகொலை சம்பவம் நடந்தது. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள்  கூட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் உயிர்த் தியாகம் செய்த தியாகிகளுக்கான நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், பத்ராக் மாவட்டம் ரானிடால் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகையில், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக இந்திய பாதுகாப்பு படையின் வெற்றிகரமான செயல்பாடுகளால் தீவிரவாதிகள் விரக்தி அடைந்திருப்பதை பாகிஸ்தான் உணர்ந்துள்ளது. அதனால், அவர்களுக்கு ஆதரவு அளித்து புல்வாமா தாக்குதலை அரங்கேற்றி உள்ளது. இதில் பலியான 40 வீரர்களின் தியாகம் வீண் போகாது. இத்தாக்குதலுக்கு சரியான பதிலடி தர ராணுவத்தின் கைகள் சுதந்திரமாக விடப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் எதிரிகளுக்கு பாடம் கற்பிக்க உள்ள ராணுவத்திற்கு ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajnath Singh ,Pakistani , Rajnath Singh,allegation,Pakistan,terrorists,Support
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...