×

4 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் கொலை மற்றும் ஆள்கடத்தல் உட்பட பல்வேறு குற்ற செயல்களில் தொடர்ந்து  ஈடுபட்டு வரும் நபர்களை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.
 அந்த வகையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட போடிநாயக்கனூர் மீனாட்சிபுரம் செல்வராஜ் தெருவை சேர்ந்த கதிரவன் (எ) கதிரேசன் குமார் (30), தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த எருக்கஞ்சேரி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த தினேஷ் (எ) பாபு (28), கொலை வழக்கில் தொடர்புடைய கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவை சேர்ந்த எலி (எ) பிரசாந்த் (23), ெகாலை மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய பல்லாவரம் அடுத்த நாகல்கேணி சபாபதி நகரை சேர்ந்த சிட்டி பாபு (36) ஆகிய 4 பேரை போலீசார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது ெசய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kundas,for, 4 people
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...