×

சபரிமலை தந்திரி விளக்கம் அளிக்க மேலும் 2 வாரம் அவகாசம்

திருவனந்தபுரம், ஜன. 22: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 2ம் தேதி கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கனக துர்க்கா ஆகியோர் தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தந்திரி கண்டரர் ராஜீவரர் கோயில் நடையை சாத்தி பரிகார பூஜை நடத்தினார். இதற்கு கேரள அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக ஜனவரி 21க்குள் விளக்கம் அளிக்க கடந்த 2 வாரத்துக்கு முன் திருவிதாங்கூர் தேவசம்போர்டு உத்தரவிட்டது. நேற்றுடன் இந்த காலக்கெடு முடிவடைந்தநிலையில், தந்திரி கண்டரர் ராஜீவரரின் கோரிக்கையை ஏற்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அவருக்கு மேலும் 2 வாரம் கால அவகாசம் அளித்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tantri ,Sabarimala , Sabarimala tantri
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு