×

நிர்மலா தேவியை மீண்டும் ஜனவரி 10ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவு

விருதுநகர் : கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிர்மலா தேவியை மீண்டும் ஜனவரி 10ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரையும் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடைபெற்று வரும் வழக்கு சம்பந்தமாக தனது கருத்தை கணவர், அண்ணன் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்க விருப்பம்  என்று நீதிமன்றத்தில் ஆஜராகி சிறைக்கு செல்லும் முன் நிர்மலா தேவி தகவல் அளித்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Desai , Professor, Murugan, Research student, Blacksmith,Nirmala Devi
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...