×

சென்னையில் 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்: மனிதநேய மருத்துவருக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி

சென்னை: சென்னையில் ஏழை எளிய மக்களுக்கு 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்த ஜெயச்சந்திரன் என்ற மருத்துவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 71. சென்னை வண்ணாரப்பேட்டையில் 1972-ம் ஆண்டு சிறியதாக கிளினிக் தொடங்கிய ஜெயச்சந்திரன் முதலில் 2 ரூபாய் மட்டுமே சிகிச்சை கட்டணமாக வாங்கியுள்ளார். 24 மணிநேரமும் செயல்படும் கிளினிக்-ஐ இரவு பகல் பாராது எப்போதும் நோயாளிகளுக்கு இன்முகத்துடன் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

சில நேரங்களில் சிகிச்சைக்கு வரும் முதியவர்கள் திரும்பி செல்ல ஆட்டோவிற்கு பணம் கொடுத்ததும் அவர் அனுப்பி வைத்த நிகழ்வுகளும் உண்டு. சமூக நலனில் அக்கறை கொண்ட மருத்துவர் ஜெயச்சந்திரன் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களையம் நடத்தியுள்ளார். மனிதநேயம் மிக்க அவரது மறைவை குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டதாகவே கருதி ஏழை, எளிய மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : doctor ,Chennai , doctor,treated,5 rupees,Chennai,died,People ,tearing tears,humanitarian doctor
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...