புதுடெல்லி: சபரிமலையில் கேரள அரசின் கெடுபிடி காரணமாக பக்தர்கள் அவதிக்குள்ளாகிறார்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மக்களவையில் கேரள அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார். சபரிமலையில் போலீசார் தேவையின்றி பக்தர்களின் வாகனங்களை தடுத்து பிரச்சனை செய்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும், கேரள, போலீசுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி