×

புனையப்பட்ட கதை... அருண் ஜெட்லி கருத்து

புதுடெல்லி:ரபேல் விமான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனும் டெல்லியில் கூட்டாக நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது அருண் ஜெட்லி கூறுகையில், ‘‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்து புனையப்பட்ட கதை என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பால் உறுதியாகி உள்ளது. தேச பாதுகாப்பை விட்டுக்கொடுத்து, பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்கி, இதை தடுக்க நினைத்தவர்கள் அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள். நேர்மையான ஒப்பந்தங்கள் மீது சந்தேகம் கிளப்பப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வைத்துவிடும். ராகுல் காந்தி கூறிய ஒவ்வொரு குற்றச்சாட்டும் பொய்யானது. பொய் சொல்லி மாட்டிக் கொண்டால், அந்த தலைவர் தனது பதவியை விட்டு விலகுவதுதான் ஜனநாயகத்தின் பாரம்பரியம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arun Jaitley , Central Finance Minister, Arun Jaitley, fabricated story
× RELATED அருண் ஜெட்லி அரங்கம் தயார்: டெல்லி – ஐதராபாத் இன்று பலப்பரீட்சை