×

போதை மாத்திரைகள் கேட்டு மெடிக்கலை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவர்கள்

சென்னை: சென்னை அடுத்த படப்பையில் மருந்து கடையில் போதை மாத்திரைகள் கேட்டு கல்லூரி மாணவர்கள் 2 பேர் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படப்பையில் உள்ள மருந்து கடைக்கு சென்ற கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரை கேட்டு வற்புறுத்தியுள்ளனர். கடையின் உரிமையாளர் சரவணன், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த மாணவர்கள் மருந்துகடை மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இது அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். மாணவர்களின் தாக்குதலில் மருந்து கடையில் இருந்த கணினி மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. தகவல் கிடைத்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : College students , Medical, pharmacy, drugstore, college students,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...