×

தென்காசி தொகுதி அதிமுக எம்பியை காணவில்லை கண்டுபிடித்து தந்தால் சன்மானம்: இந்திய கம்யூ. ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் உள்ள முத்தாலம்மன் திடலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில், ‘‘அதிமுக தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசனை காணவில்லை. காணாமல் போன நாள் 2014, மே 30, நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெற்றுச் சென்றவர் திரும்ப வரவே இல்லை. காணாமல் போய் விட்டார். வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள சிற்றூர் மற்றும் பேரூராட்சிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி வந்ததாக தெரியவில்லை. கண்டுபிடித்து கொடுத்தாலோ, இருக்கும் இடம் குறித்து aதகவல் அளித்தாலோ தக்க சன்மானம் வழங்கப்படும்... இவண்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வத்திராயிருப்பு ஒன்றியம்,’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூ. முன்னாள் எம்எல்ஏ ராமசாமி  கூறுகையில், ‘‘எம்பி வசந்தி முருகேசன் வத்திராயிருப்பு  ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இங்கு குடிநீர்  பற்றாக்குறை, மர்ம காய்ச்சல், வறட்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அக்கறை காட்டவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை. எனவேதான் காணவில்லையென பிளக்ஸ் பேனரை வைத்தோம்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : block ,Tenkasi ,AIADMK , Tenkasi Group, AIADMK, Indian Comm
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...