×

எக்காரணத்தைக் கொண்டும் ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது: அருண் ஜெட்லி திட்டவட்டம்

டெல்லி: எக்காரணத்தைக் கொண்டும் ரபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் ரபேல் போர் விமானத்தை பயன்படுத்த தலைமை கணக்குத் தணிக்கை துறையின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கு கூட்டணி அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை விட தற்போது ரபேல் விமானம் மலிவாக வாங்கப்படுகிறது என்றும் இது தொடர்பான விலை மற்றும் உண்மை நிலவரங்கள் புள்ளி விவரங்களுடன் தலைமை கணக்குத் தணிக்கை துறையிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arun Jaitley, Raphael Flight, Agreement, Indian Army,
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...